100 ml
Get it delivered in 2- 5 business days
Quantity
310 in stock
Santhanathi thailam சந்தனாதி தைலத்தை பயன்படுத்தும் முறை.
ஒரு மஞ்சள் நிற துணியை இந்த சந்தனாதி தைலத்தில் நன்றாக நனைத்து பிழிந்து விட்டு, அந்த மஞ்சள் துணிக்கு நடுவே சோம்பு ஒரு டீ ஸ்பூன் அளவு, கிராம்பு 5, பச்சை கற்பூரம் 5 துண்டுகள், இந்த 3 பொருள்களையும் ஒன்றாக வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும். இந்த முடிச்சை வாசற்படியில் ஒன்றும் பூஜை அறையில் ஒன்றும் ஆணியில் மாட்டி விடுங்கள்.
15 நாளுக்கு ஒருமுறை இந்த முடிச்சுகளை மாற்றி வாருங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்.
வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறி, வீட்டிற்குள் தெய்வ சக்தி நிலையாக குடிகொள்ள இது ஒரு சுலபமான பரிகாரம்.
சந்தனாதி தைலம் என்பது ஆன்மிக, மருத்துவப் பயன்கள் கொண்ட ஒரு எண்ணெய். இது தீய சக்திகளை நீக்கி, நல்ல அதிர்வுகளை ஈர்க்க, மனதை அமைதிப்படுத்த, தூய்மையான பூஜை மற்றும் தியானத்திற்கு உதவுகிறது. இந்த சந்தனாதி தைலமானது கோவில்களில் உள்ள சிலைகள் மேலே தடவி விடுவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்.
வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது.
மனதை அமைதிப்படுத்தி, தியானத்திற்கும், பூஜைகளுக்கும் உகந்த சூழலை உருவாக்குகிறது.
பூஜைகள் மற்றும் மந்திரங்கள் சொல்லி சந்தனாதி தைலத்தைப் பயன்படுத்தி வழிபாடு செய்வதன் மூலம் தெய்வீக ஆற்றலை அதிகரிக்கலாம்.
( பூஜை பயன்பாட்டிற்கு மட்டும். மருத்துவத்திற்கு அல்ல. )
Your cart is empty